ரா.பேட்டையில் நாளை மின் தடை

தங்கவயல்: தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் மின் பழுது பார்க்கும் பணிகளால், நாளை மின் தடை செய்யப்படுகிறது.

பெஸ்காம் செயற்பொறியாளர் கவிதா வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக, மின் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ராபர்ட்சன்பேட்டை 2வது எம்.ஜி.மார்க்கெட், காய்கறிகள் மார்க்கெட், எம்.ஜி.சாலை, பஸ் நிலையம், 1 வது கிராஸ், மினி இப்ராஹிம் சாலை ஆகிய இடங்களில் நாளை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement