வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


@1brதிருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னப்பன், ஜான் கென்னடி, ராபர்ட் உள்ளிட்டோர் கேரளா சென்று விட்டு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். வழியில் வேடசந்தூர் அய்யனார் கோயில் அருகே, கார் மீது பழநியில் இருந்து வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் சின்னப்பன், ஜான் கென்னடி, ராபர்ட் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.


மேலும் 3 பேர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement