ஓ.எம்.ஆரில் புத்தக திருவிழா துவக்கம்

சென்னை, சென்னை, ஓ.எம்.ஆர்., சாலை பெருங்குடியில், ஐந்தாவது ஓ.எம்.ஆர்., புத்தகத் திருவிழா, வள்ளலார் சன்மார்க அரங்கத்தில் நேற்று துவங்கியது.

புத்தக திருவிழாவை துவக்கி வைத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

இந்தியாவில் தமிழகம் தான் முதன் முதலில், 1948ல் பொது நுாலக சட்டத்தை கொண்டு வந்தது. 'டிவி, மொபைல் போன்' வந்தவுடன் வாசிப்பு போய்விடும் என்றார்கள். அந்த மதிப்பீடு சரிதான். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், வாசிப்பு அதிகரித்துள்ளது.

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் விரைவில் முனைப்போடு செயல்படும்.

இவ்வாறு பேசினார்.

பத்து நாட்கள் நடக்கும் புத்தக திருவிழாவில், லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement