பொது - உடல் உறுப்பு தானத்தால் மூவருக்கு மறுவாழ்வு

சென்னை,மணலி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி, 49. இவருக்கு, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உயர் சிகிச்சைக்காக, ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த அந்த பெண், கடந்த 17ம் தேதி இரவு மூளைச்சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை தானமளிக்க குடும்பத்தினர் முன்வந்தனர்.

அதன்படி, சிறுநீரகங்கள், கல்லீரல், விழி வெண்படலங்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. அதில், ஒரு சிறுநீரகம் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

மற்றொரு சிறுநீரகம், மேத்தா மருத்துவமனைக்கும், கல்லீரல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், விழி வெண்படலங்கள் எழும்பூர் கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டதாக, மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணிராஜன், அவசர சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் கோமதி ஆகியோர் தெரிவித்தனர்.

Advertisement