பைக்கில் வந்து நகை பறித்த லாரி உரிமையாளர் கைது
வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிசெயினை டூவீலரில் வந்து பறித்த வழக்கில் லாரி உரிமையாளர் , டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
வேடசந்துார் ஜி. நடுப்பட்டி கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி பாப்பாத்தி 55. இவர் ரோட்டில் நடந்து சென்ற போது, டூவீலரில் வந்த இருவர் வழி கேட்பது போல் பேசி 6 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர்.
டி.எஸ்.பி.,பவித்ரா, இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையில் போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி சாணார்பட்டி கோணப்பட்டியை சேர்ந்த வைக்கோல் வியாபாரியும் லாரி உரிமையாளருமான நாகராஜ் 45, அவரது டிரைவரான கொசவபட்டி அருமைராஜ் 45, ஆகியோரை கைது செய்தனர். பறித்த சங்கிலியையும் மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
Advertisement
Advertisement