மரக்கன்று நடும் விழா மாவட்ட நீதிபதிகள் பங்கேற்பு

காஞ்சிபுரம்:பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கோளிவாக்கம் கிராமத்திலும், அங்குள்ள தனியார் மருந்தியல் கல்லுாரி வளாகத்திலும், கீழம்பி - செவிலிமேடு புறவழிச் சாலையிலும், சட்ட பணிகள் ஆணைக்கு சார்பில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி செம்மல் தலைமையில் நேற்று நடந்தது.
நீதிபதிகள் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினர்.
இந்நிகழ்ச்சியில், வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் அருண்சபாபதி வரவேற்புரை ஆற்றினார். தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா, கூடுதல் சார்பு நீதிபதி திருமால், வழக்கறிஞர்கள், நிர்வாக உதவியாளர் சதீஷ்குமார், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மரம் நடும் நிகழ்ச்சியை தொடர்ந்து, தனியார் மருந்தியியல் கல்லுாரியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், விழிப்புணர்வு முகாம், நீதிபதி செம்மல் தலைமையில் நடந்தது.
அப்போது, பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டனர். அதற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு