பசு மாடு மீட்பு

திருச்சுழி:
திருச்சுழி அருகே கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

திருச்சுழி அருகே கோணப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாருக்கு சொந்தமான பசு மாடு மேய்ச்சலுக்குச் சென்ற போது எதிர்பாராத நிலையில் அங்கிருந்த தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

இது குறித்து திருச்சுழிதீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து நிலைய அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குதித்து தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டை டிராக்டர் உதவியுடன் கயிறு கட்டி மீட்டனர்.

Advertisement