கத்தியை காட்டி வழிப்பறி: மூன்று சிறுவர்கள் கைது
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே வடுகபட்டி வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் குணசீலன் 27. தேனியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தேனியிலிருந்து பைபாஸ் ரோட்டில் டூவீலரில் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
தாமரைக்குளம் பைபாஸ் ரோட்டோரம் டூவீலரை நிறுத்தி சிறுநீர் கழித்தார்.
அப்போது குணசீலனை கத்தியை காட்டி 3 பேர் பணம் கேட்டு மிரட்டினர். குணசீலன் தன்னிடம் பணம் இல்லை என்றார். மூன்று பேரும் அவரது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை வழிப்பறி செய்து தப்பினர்.
தென்கரை எஸ்.ஐ., கர்ணன், வடுகபட்டியைச் சேர்ந்த 17 வயது 3 சிறுவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து அலைபேசியை கைப்பற்றினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement