வாலிபர் தற்கொலை

போடி,:
போடி தென்றல் நகரில் வசித்தவர் கருப்பசாமி 29. இவர் மனநிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு இவரது தந்தை பால்பாண்டி இறந்து விட்டார். இதனால் மனம் உடைந்த கருப்பசாமி நேற்று முன்தினம் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகே இருந்தவர்கள் கருப்பசாமியை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

போடி தாலுாகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement