ஓய்வு வி.ஏ.ஓ., கொலை: 17 வயது சிறுவன் கைது
வேடசந்துார்:
வேடசந்துார் அருகே ஓய்வு வி.ஏ.ஓ.,வை கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
புளியமரத்துக்கோட்டையை சேர்ந்தவர் ஓய்வு வி.ஏ.ஓ., மாரியப்பன் 70. ஏப்.11ம் தேதி வீட்டில் இறந்து கிடந்தார்.
இவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக வேடசந்துார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புதைத்த உடலை தோண்டி எடுத்து மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விசாரணையில் மாரியப்பன் தோட்டத்தில் வேலை செய்த 17 வயது சிறுவன் நகைக்காக மாரியப்பனை கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
Advertisement
Advertisement