பைக் மோதியதில் ஏட்டு கால் முறிவு
புவனகிரி, ; புவனகிரி அருகே ரோந்து பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற ஏட்டு மீது, சென்டரிங் பலகை ஏற்றி வந்த பைக் மோதி, இடது காலில் முறிவு ஏற்பட்டது.
குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூர் அகரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் அகிலன்,33; இவர் புவனகிரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணி முடிந்து, காலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
புவனகிரி அடுத்த வடக்கு திட்டை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, எதிரே தெற்குதெட்டை தெற்கு தெருவை சேர்ந்த அர்ஜுனன் பைக்கில் சென்ட்ரிங் பலகை ஏற்றிக்கொண்டு வந்தபோது ஏட்டு பைக் மீது மோதியது. இதில் அகிலனின் இடது கால் முறிவு ஏற்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement