பிரதான சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு வழி வேண்டும்
பனமரத்துப்பட்டி:
சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, தாசநாயக்கன்பட்டியில் மேம்பாலம் கட்டுமான பணி முடிந்து, சமீபத்தில் வாகன போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: வெளி மாவட்டங்களில் இருந்து பிரதான சாலையில் வரும் வாகனங்கள், மேம்பாலம் வழியே சேலம் செல்கின்றன. வெளியூரில் இருந்து பிரதான சாலையில் வரும் வாகனங்கள், சர்வீஸ் சாலை வழியே தாசநாயக்கன்பட்டி செல்ல, பாதை விடவில்லை.
சேலத்தில் இருந்து பிரதான சாலையில் வரும் வாகனங்கள், நிலவாரப்பட்டி செல்வதற்கு பாதை விடவில்லை. இருசக்கர வாகனம் செல்லும் அளவிற்கு வழி விடப்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது. பிரதான சாலையில் வரும் வாகனங்கள், பாலத்தின் மீது செல்வதை தவிர்த்து, பக்கவாட்டில் உள்ள சர்வீஸ் சாலை வழியே தாசநாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி செல்வதற்கு பாதை விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது