பிறந்த 21 நாட்களில் ஆண் குழந்தை பலி


கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தேர்நிலை தெருவை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி மீனா, 35. இவருக்கு, கடந்த மாதம், 27 அதிகாலை, 3:00 மணிக்கு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை கடந்த, 16 இரவு உயிரிழந்தது. கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு வழக்குப்பதிந்து
விசாரிக்கிறார்.

Advertisement