சாரல் மழையால் ஏமாற்றம்



அரூர்::தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்


. இந்நிலையில் நேற்று மதியம், 3:00 மணிக்கு அரூர் மற்றும் பச்சினாம்பட்டி, தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் சாரல்மழை பெய்தது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கனமழையை எதிர்பார்த்திருந்த பொதுமக்கள், நேற்று பெய்த சாரல்மழையால் ஏமாற்றமடைந்தனர்.

Advertisement