ரெங்கசாமி கோவிலில் சித்திரை திருவிழா மே 1ல் தொடக்கம்

கரூர்:

கரூர், அபயபிரதான ரெங்கசாமி சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா மே., 1ல் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கசாமி சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு மே., 1ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. மே., 10 காலை, 7:45 மணிக்கு தேரோட்டம், 11ல் அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, 12 ல் ஆளும் பல்லக்கு, 13 ல் ஊஞ்சல் உற்சவம், 14ல் புஷ்ப யாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

Advertisement