பைனான்சில் நஷ்டம் இளைஞர் உயிரிழப்பு
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி அருகே மூலப்பட்டி அடுத்த, வடுகநாகம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஷ், 41. இவர் கடந்த சில ஆண்டுகளாக, பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், மனமுடைந்த சதீஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, இவரது மனைவி ஜெயந்தி, 36, கடந்த ஓராண்டாக தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சதீஷ் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி அருகே உள்ள தோட்டத்தில் மது அருந்திவிட்டு, சுயநினைவின்றி கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement