கஞ்சா கடத்தல்  தண்டனை

மதுரை: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் சசிகுமார் 43.

இவர் ஆந்திரா பதிவு எண் கொண்ட ஒரு காரில் 150 கிலோ கஞ்சாவை 2017 ல் கடத்தி திண்டுக்கல் - மதுரை ரோடு தோமையாபுரம் வந்தபோது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.

Advertisement