15 நிமிடத்தில் 'மதுரை பன் அல்வா'

பல விதமான உணவுகளுக்கு பெயர் பெற்றதில் முதலிடம் மதுரைக்கு உண்டு. மல்லிப்பூ இட்லி, ஜிகர்தண்டா என பல உணவு வகைகள் பேமஸ். இந்த வாரம் இவ்வூரின் 'பன் அல்வா' எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
செய்முறை
முதலில் பன்னை உதிரியாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் உதிர்ந்து வைத்துள்ள பன்னை அதில் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 'ரஸ்க்' போன்று மொறு மொறு என்ற பதத்தில் வந்ததும், வேறு பாத்திரத்தில் போடவும்.
பின், அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி வறுத்து வைத்துள்ள பன்னை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிது தண்ணீர், அரை கப் பால் சேர்த்து நன்றாக கிளறவும்.
கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வந்ததும், கருப்புக்கட்டியை காய்ச்சி வடிகட்டி, பன் கலவையில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். அதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரியையும் சேர்க்கவும்.
15 நிமிடங்களுக்கு நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நெய்யை முழுவதுமாக சேர்க்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும்.
நெய் பிரிந்து, பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டால் போதும். சுவையான மதுரை ஸ்பெஷல் பன் அல்வா ரெடி
- நமது நிருபர் -.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது