சூதாடிய 4 பேர் கைது

கிள்ளை; கிள்ளை அருகே காசு வைத்து சூதாடிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் நேற்று கிள்ளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது, கோழிப்பள்ளம் மாரியம்மன் கோவில் அருகே காசு வைத்து சூதாடிக் கொண் டிருந்த நக்கரவந்தன்குடி தெற்கு தெரு சுரேந்தர், 31; சிலம்பரசன், 40; மற்றும் கிழக்கு தெரு விஜயபாஸ்கர், 37; செந்தில், 40; ஆகிய நான்கு பேரை பிடித்து போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, ரூ. 100 பணம் மற்றும் 52 புள்ளி தாள்கள் கைப்பற்றப்பட்டது.

Advertisement