அ.தி.மு.க.., ஆர்ப்பாட்டம்

சிவகாசி : நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசை கண்டித்து மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். கருப்புச்சட்டை அணிந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து நீட் தேர்வினால் இறந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாக்டராவது உங்களது லட்சியமா?: வாருங்கள் வழிகாட்டுகிறது 'தினமலர்'
-
தி.மு.க.,வுக்கு சாதகமில்லாததால் கூட்டுறவு தேர்தல் தள்ளிவைப்பு
-
தமிழகம், புதுச்சேரியில் 25 வரை மிதமான மழை
-
கல்வான், சியாச்சினில் அலைபேசி சேவை 18,000 அடியில் 5ஜி சேவை வழங்கி சாதனை
-
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
Advertisement
Advertisement