பெண் உட்பட 3 பேர் மாயம் போலீசார் விசாரணை

அரியாங்குப்பம்: புதுச்சேரியில் பெண் உட்பட 3 பேர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பம், வீராம்பட்டினம் சாலை, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் சேகர். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி லட்சுமி, 25. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்தது.

சேகர் கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்று விட்டு இரவு வந்து பார்க்கும் போது, வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை. சேகர் புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் கார்த்திக் மகன் முகேஷ்,25. கடந்த 16ம் தேதி வெளியே சென்ற இவர், வீடு திரும்பவில்லை. அவரது தந்தை புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த கரசூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சஞ்சய், 19. இவரை கடந்த 16ம் தேதி முதல் காணவில்லை. புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

Advertisement