பூமியான்பேட்டையில் நாளை குடிநீர் 'கட்'

புதுச்சேரி: பூமியான்பேட்டை கீழ்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணியால், நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

பூமியான்பேட்டை பகுதியில், நாளை (22ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, பூமியான்பேட்டை, விக்டோரியா நகர், ஜவஹர் நகர், பாவாணர் நகர், ஜான்சி நகர், பொன் நகர், சுதாகர் நகர், சரநாராயணா நகர், காவேரி நகர், செல்லபாப்பு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement