நடிகர் சிவாஜி கணேசன் வீட்டின் ஜப்தி உத்தரவு ரத்து

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.
இந்த கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் 'அன்னை இல்லம் எனது வீடு கிடையாது. தம்பி பிரபுவின் வீடு எனவே தடையை ரத்து செய்ய வேண்டும்' என்று மனு செய்தார்.
இதற்கிடையே, நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்ய கோரி நடிகர் பிரபு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 21) விசாரித்த உயர்நீதிமன்றம், ''நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்'' என்பதை உறுதி செய்தது.
பின்னர் வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.








மேலும்
-
அ.தி.மு.க., நிபந்தனை விதிக்க தயாரா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
குறைந்தது ஐ.பி.எல்., மோகம்; சொத்தை ஆட்டத்தால் சோகத்தில் ரசிகர்கள்; டிக்கெட் விற்பனை மந்தம்!
-
யாரிடம் நிதியும், அதிகாரமும் இருக்கிறதோ, அவரிடம் கேளுங்க; அமைச்சர் தியாகராஜன் விரக்தி
-
A+ பிரிவில் கோலி, ரோகித்; பி.சி.சி.ஐ.,யின் மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு
-
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக்கோரி மனு: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கூடாது; உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை