ஏர்போர்ட்டில் வேலை மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்திய விமான நிலைய ஆணையம், விமான தகவல் கட்டுப்பாட்டுப் பிரிவில், இளநிலை அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப உள்ளது.
விமான நிலையங்களில், ஏ.டி.சி., எனப்படும், விமான போக்குவரத்து தகவல் கட்டுப்பாட்டு கோபுரம் செயல்படுகிறது. இங்கிருந்து தான் விமான இயக்கங்கள் செயல்படும். இந்நிலையில், விமான நிலைய ஆணையம், ஏ.டி.சி., இளநிலை அதிகாரிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுதும், 309 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு பி.எஸ்சி., வேதியியல், கணிதம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். வயது 27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க, 25ம் தேதி கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.aai.aero இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து (1)
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
22 ஏப்,2025 - 05:44 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இருநாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
-
புதிய போப் ஆகும் வாய்ப்பு யாருக்கு?
-
மானியம் பெற்றுத்தர லஞ்சம்; கூட்டுறவு சங்க மேலாளர் கைது; ரூ.15.89 லட்சம் பறிமுதல்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
Advertisement
Advertisement