அரியாங்குப்பம் 14 பஞ்சாயத்துக்களில் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம்
அரியாங்குப்பம்: மே தினத்தை முன்னிட்டு, அரியாங்குப்பம் கொம்யூனில் உள்ள 14 பஞ்சாயத்துக்களில் வரும் 1ம் தேதி கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
மே 1ம் தேதி அன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பி.சி.பி., நகர் சமூதாய நலக்கூடம், அரியாங்குப்பம் கொம்யூன் அலுவலகம் எதிரில், 1ம் தேதி காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.
அதே போல, அன்றைய தினத்தில், அரியாங்குப்பம் ஆர்.கே., நகர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில், ஓடைவெளி பிள்ளையார் கோவில், மணவெளி புருேஷாத்தம்மன் சமூதாய நலக்கூடம், தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில், ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே, டி.என். பாளையம் சமூதாய நலக்கூடம் எதிரில், நல்லவாடு சமூதாய நலக்கூடம் உள்ளிட்ட 14 கிராம பஞ்சாயத்துக்களில் கிராமசபை கூட்டம் நடக்கிறது.
இவ்வாறு, ஆணையர் கூறியுள்ளார்.
மேலும்
-
ஜெய்ப்பூர் அரண்மனையை பார்த்து வியந்த அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் குடும்பம்
-
ஓசூரில் புதிய விமான நிலையம் ; இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல்
-
இருநாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
-
புதிய போப் ஆகும் வாய்ப்பு யாருக்கு?
-
மானியம் பெற்றுத்தர லஞ்சம்; கூட்டுறவு சங்க மேலாளர் கைது; ரூ.15.89 லட்சம் பறிமுதல்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்