மின்கம்பி அறுந்து விழுந்து இரு சக்கர வாகன ஓட்டி பலி

துமகூரு: கன மழை பெய்தபோது, மின்கம்பி அறுந்து விழுந்ததில், இரு சக்கர வாகன ஓட்டி உயிரிழந்தார்.
துமகூரு மாவட்டம், கொரட்டகெரேயின் சீலகனஹள்ளியை சேர்ந்தவர் யோகேஷ், 42. நேற்று முன்தினம் இவரும், இவரது நண்பர் நரசிம்மராஜுவும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.
இந்த வேளையில் கன மழை பெய்து கொண்டிருந்தது. கிராமத்தின் அருகே சென்றபோது, அவர்கள் மீது மின்கம்பி விழுந்தது. இதனால், இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் யோகேஷ் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த நரசிம்மராஜுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரட்டகெரே போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெய்ப்பூர் அரண்மனையை பார்த்து வியந்த அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் குடும்பம்
-
ஓசூரில் புதிய விமான நிலையம் ; இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல்
-
இருநாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
-
புதிய போப் ஆகும் வாய்ப்பு யாருக்கு?
-
மானியம் பெற்றுத்தர லஞ்சம்; கூட்டுறவு சங்க மேலாளர் கைது; ரூ.15.89 லட்சம் பறிமுதல்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
Advertisement
Advertisement