பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; 26 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பேரதிரிச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி, உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையை நடத்தினார்.
முன்னதாக, காஷ்மீருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
Keshavan.J - Chennai,இந்தியா
23 ஏப்,2025 - 16:08 Report Abuse

0
0
Reply
veeramani hariharan - ,இந்தியா
23 ஏப்,2025 - 13:04 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23 ஏப்,2025 - 12:04 Report Abuse

0
0
Reply
மேலும்
-
காஷ்மீர் பயணத்திட்டத்தை மாற்றும் சுற்றுலா பயணிகள்: 90% முன்பதிவு ரத்து
-
பஹல்காம் தாக்குதல் : பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் தொடங்கியது
-
பஹல்காம் தாக்குதலில் கதறிய சுற்றுலா பயணிகள்: நம்பிக்கை ஊட்டிய ராணுவ வீரரின் வைரல் வீடியோ
-
காஷ்மீரில் இருந்து 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்
-
பஹல்காம் தாக்குதலுக்கு நமது அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும்: அண்ணாமலை
-
பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி; பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
Advertisement
Advertisement