காஷ்மீரில் இருந்து 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்

4

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் பத்திரமாக டில்லி திரும்பினர்.


காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பலியானார்கள் மேலும் சிலர் காயமைடைந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேரும் காஷ்மீரிலிருந்து தங்களது மாநிலத்திற்கு திரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் இன்று(ஏப்.23) பிற்பகல் டில்லி வந்து சேர்ந்தனர். டில்லி திரும்பிய அவர்களை டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் வரவேற்றார். தமிழ்நாட்டை சேர்ந்த 35 சுற்றுலாப் பயணிகளும் ரயில் மூலம் இன்று இரவே சென்னை திரும்புகின்றனர்.

Advertisement