திருச்சி விமான நிலையத்தில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
திருச்சி:திருச்சியில் இருந்து, கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பயணியிடம்,16.52 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை, விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று, ஏர் ஏசியா விமான மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாரானது. அதில் செல்ல இருந்து பயணியர் மற்றும் உடமைகளை, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், பயணி ஒருவர், 16 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை மறைத்து எடுத்துச் சென்றதை கண்டுபிடித்தனர். அதனை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிந்து நதி நீர் நிறுத்தம்; சந்திக்கப் போகும் சவால்கள்!
-
பாகிஸ்தானுக்கு பதிலடி; இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?
-
கைத்தறி நெசவு தொழில் பாதுகாக்கப்படுமா?
-
காட்டுப்பன்றிகள் நடமாட்டம்; கண்காணிப்புக்குழு அமைப்பு
-
ஹிந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி
-
கடைக்கோடி விவசாயிகளையும் சென்றடையுமா திட்டங்கள்?
Advertisement
Advertisement