தங்கும் விடுதியில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது

சென்னை, மயிலாடுதுறை, சீர்காழியைச் சேர்ந்தவர் ராஜகுமாரன், 32; சென்னை, தி.நகரில் ஒரு விடுதியில் தங்கி, போட்டி தேர்வுகளுக்கு பயில்கிறார்.

கடந்த, 4ம் தேதி, அவரது அறையில் வைத்திருந்த, மடிக்கணிணி, மொபைல் போன், சார்ஜர் ஆகியவை திருடுபோயின.

வழக்கு பதிந்த பாண்டிபஜார் போலீசார், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜதுரை, 24, திருட்டில் ஈடுபட்டது தெரிந்து, அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு மடிக்கணிணி, ஒரு சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement