உயிரிழந்தோருக்கு மோட்ச தீபம்
பெரியகுளம் : பெரியகுளம் வடகரை போக்குவரத்து கழக டெப்போ அருகே பா.ஜ., வினர், காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு மோட்ச தீபம் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமை வகித்தார். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சன்னாசிபாபு, ஐ.டி., பிரிவு மாநில செயலாளர் வசந்த் பாலாஜி, செயற்குழு உறுப்பினர் கோபிக்கண்ணன், நிர்வாகிகள் சுந்தர்,பாலு, முத்துப்பாண்டி, முருகன், ஐயப்பன், சோமசுந்தரம் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பாகிஸ்தான் கொடி எரிக்கப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்.
சின்னமனூர்: மெயின் ரோட்டில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் சுந்தர் தலைமையில, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடந்தது. ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மாலையில் பா.ஜ. சார்பில் உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பா.ஜ. நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து