பொதட்டூர் வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே வாகனங்கள் ஆக்கிரமிப்பு

பொதட்டூர்பேட்டை"பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அத்திமாஞ்சேரிபேட்டை சாலையில், வருவாய் ஆய்வாளர் அலுவலகமும், அதன் அருகே வி.ஏ.ஓ., அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.
வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே உள்ள மரத்தடியில், ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
குறுகலான இந்த சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், அந்த வழியாக அத்திமாஞ்சேரிபேட்டைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இந்த பகுதியில் கூடாரம் அமைத்து கடைகள் நடத்துபவர்களால் சாலை மேலும் குறுகலாக உள்ளது. விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.
அருகில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியரின் பெற்றோர் அச்சத்தில் தவித்து வருகின்றனர். சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களையும், கடைகளையும் அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
-
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!