குளிர்பதன கிடங்கு மானியம்
மதுரை : தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பழங்கள், காய்கறிகள், பூக்களின் தரம் குறையாமல் பாதுகாக்கும் வகையில் முன் குளிரூட்டப்பட்ட கிடங்கு அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
ஆறு டன் கொள்ளளவுள்ள கிடங்கு அமைத்த பின், 35 சதவீதம் வீதம் அதிகபட்சமாக ரூ.8.75 லட்சம் மானியம் வழங்க மதுரைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கடன் மூலம் வேளாண் கட்டுமான நிதியின் கீழ் 3 சதவீத வட்டித்தொகை தள்ளுபடிக்காக விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள விவசாயி, தொழில்முனைவோர் தோட்டக்கலை துணை இயக்குநர் அல்லது அந்தந்த வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குநர் பிரபா தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
Advertisement
Advertisement