500 போலீசாருக்கு ஹெல்மெட்

1

மதுரை : மதுரை நகர் போலீசார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 500 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. எலிக்ஸிர் பவுண்டேஷன், டூ ஹோம் பைனான்ஸ் சார்பில் 3000 போலீசார் உட்பட மொத்தம் 12 ஆயிரம் பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக நேற்று 500 ஹெல்மெட் வழங்கி கமிஷனர் லோகநாதன் பேசுகையில், ''மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நாமும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும்'' என்றார்.

போக்குவரத்து துணைகமிஷனர் வனிதா, கூடுதல் துணைகமிஷனர் திருமலைகுமார், உதவி கமிஷனர்கள் இளமாறன், செல்வின், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், நந்தகுமார், சோபனா, பஞ்சவர்ணம், பூர்ணகிருஷ்ணன், சுரேஷ், தங்கப்பாண்டி, பைனான்ஸ் நிறுவன அதிகாரி ராகவன், பவுண்டேஷன் சார்பில் கார்த்திக், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement