ரூ.10 லட்சம் கையாடல்; ஊழியர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் பழநி ரோட்டில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் சின்னாளப்பட்டியை சேர்ந்த சந்திரன் 23, கணக்காளராக 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். சில நாட்களுக்கு முன்பு வரவு, செலவு கணக்குகளை மருத்துவமனை உரிமையாளரான திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ்பாபு, அவருடைய மகன் பிரணவ் சரிபார்த்தனர்.அப்போது போலி ரசீது மூலம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவு கணக்கு காட்டப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. திண்டுக்கல் வடக்கு போலீசில் பிரணவ் புகார் கொடுத்தார். விசாரணையில் போலி ரசீது மூலம் ரூ.10.5 லட்சத்தை கையாடல் செய்தது சந்திரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
Advertisement
Advertisement