வீட்டு கூரை பெயர்ந்து விழுந்ததில் காயத்துடன் தப்பிய சிறு குழந்தை

வேடசந்துார் வேடசந்துார் டொக்குவீரன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் 25. இவரது மனைவி ரேவதி 20. கடைவீதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஆரவ் என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

குழந்தை வீட்டில் துாதூங்கி கொண்டிருந்தபோது கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. குழந்தை தலையில் காயத்துடன் உயிர் தப்பியது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement