அரசு பஸ் மோதி முதியவர் பலி

ஆண்டிபட்டி : கண்டமனூர் அருகே மேலபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி 70, நேற்று முன் தினம் கண்டமனூர் கோவிந்த நகரம் ரோட்டில் அம்பாசமுத்திரம் பிரிவு அருகே நடந்து சென்றார். பின்னால் சென்ற அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணசாமியின் மருமகள் பிரியங்கா புகாரில் பஸ் டிரைவர் கோரையூத்தைச் சேர்ந்த அஜித்குமார் மீது கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement