ஆர்ப்பாட்டம் விருதுநகர்

விருதுநகர் : விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாலையில் ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் வட்டக்கிளை செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றுவது, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புவது, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குவது உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதே போல் சிவகாசி, வத்திராயிருப்பு, ராஜபாளையம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட 10 தாலுகாக்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement