ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே ஊராட்சி உறுப்பினர் இறந்ததை அரசுக்கு தெரியப்படுத்தாத ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருநெல்வேலிமாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் அப்புவிளை ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர் சுடலைமுத்து, 2023 அக்.16ல் இறந்தார்.

அந்த தகவலை அரசுக்கு உடனடியாக தெரிவிக்காததால் ஊராட்சி செயலர் சுமிலாவை மாநில தேர்தல் ஆணையம் கண்டித்தது.

இதனை காலதாமதமாக 2025 மார்ச்சில் தெரிவித்ததால் ஊராட்சி செயலரை 'சஸ்பெண்ட்' செய்து ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement