போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!

புதுடில்லி: அரபிக்கடலில் இந்திய கடற்படை எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது. இந்த வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.
'பஹல்காம் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களும் நிச்சயம் தண்டிக்கப்படுவது உறுதி,'' என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
இதனால் இந்தியா - பாக்., இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை அழிக்கும் வகையிலான சோதனையை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை, இந்திய கடற்படை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ‛‛நீண்டதூரம் சென்று துல்லியமாக எதிரிகளின் போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் மல்டிபிள் ஏவுகணை சோதனையை இந்திய கடற்படை கப்பல் மேற்கொண்டுள்ளது. நம் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
தேச நலனை காப்பதற்கான பணியில், எந்நேரத்திலும், எந்த தாக்குதலுக்கும் தயாராகவே இருக்கிறோம்.'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (4)
thehindu - ,இந்தியா
27 ஏப்,2025 - 16:19 Report Abuse

0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
27 ஏப்,2025 - 13:10 Report Abuse

0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
27 ஏப்,2025 - 12:14 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
27 ஏப்,2025 - 12:01 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் பஹல்காமுக்கு வரும் சுற்றுலா பயணிகள்
-
பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதிக்க வாய்ப்பு
-
அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
-
அனுமதியின்றி மண் அள்ளுவதாக மக்கள் புகார்
-
ராணுவத்திற்கு நன்கொடை தருமாறு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் போலி; மத்திய அரசு எச்சரிக்கை
-
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்க தேர்தல்: ஏ.பி.வி.பி., அபார வெற்றி
Advertisement
Advertisement