கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

மறைமலைநகர்:கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன அருங்கால் கிராமத்தில் உள்ள பயன்பாடு இல்லாத விவசாய கிணற்றில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று முன்தினம் மாலை, கூடுவாஞ்சேரி போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Advertisement