சேதமான தென்னேரிப்பட்டு சாலை ரூ.1.5 கோடியில் சீரமைப்பு துவக்கம்

சூணாம்பேடு,:கடுமையாக சேதமடைந்திருந்த தென்னேரிப்பட்டு சாலை, 1.5 கோடி ரூபாயில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, பணிகள் துவங்கி உள்ளன.
சூணாம்பேடு அருகே வேலுார் கிராமத்தில் இருந்து, தென்னேரிப்பட்டு கிராமத்திற்குச் செல்லும் 2 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.
சின்னகளக்காடி, வேலுார், தென்னேரிப்பட்டு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக சாலை கடுமையாக சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியதால் பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்த நிலையில்,
ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ், 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை நடுவே கால்வாய்களை கடக்கும் பகுதியில், மூன்று சிறுபாலங்கள் அமைத்து, 2.18 கி.மீ., துாரத்திற்கு சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தனியார் நிறுவனத்திற்கு 'டெண்டர்' விடப்பட்டு, சாலை சீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன.
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி