கிணற்றில் கவிழ்ந்த வேன்; ம.பி.,யில் 11 பேர் பலி

போபால் : மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள உன்ஹேலி பகுதியைச் சேர்ந்த 13 பேர், நீமுச் மாவட்டத்தின் மனாசா பகுதியில் உள்ள அந்திரி மாதா கோவிலுக்கு, 'மாருதி சுசூகி ஈகோ' வேனில் நேற்று சென்றனர்.
புதா -- தக்ராவாத் சாலையில் வேன் சென்ற போது, பைக் ஒன்று குறுக்கே வந்தது. வேகமாக சென்ற வேன், பைக் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்தது. இதில் பைக்கில் இருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் தாறுமாறாக சென்ற வேன், சாலை ஓரம் இருந்த 40 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்தது.
வேனில் இருந்த 13 பேரில் ஒன்பது பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற வந்த அப்பகுதியைச் சேர்ந்த மனோகர் சிங் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த மீட்புப் படையினர் நான்கு பேரை பத்திரமாக மீட்டனர். உயிரிழந்த 10 பேரின் உடல்களை கைப்பற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி
Advertisement
Advertisement