குண்டும் குழியுமான சுந்தரசோழபுரம் சாலை

திருவேற்காடு:திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பிரதான சாலை 2 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை ஒட்டி, அரசு, தனியார் பள்ளிகள், சிறு குறு வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஆவடியில் இருந்து திருவேற்காடு சிவன் கோவில் மற்றும் கருமாரி அம்மன் கோவில் செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புனரமைக்கப்பட்ட இந்த சாலை, தற்போது குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
புது சாலை அமைக்காமல், அடிக்கடி கட்டட கழிவு கொட்டி சமன் செய்யப்பட்டு வருகிறது. இதனால், சாலையில் புழுதிமண்டலம் ஏற்பட்டு பகுதிவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி
Advertisement
Advertisement