சித்திரை பிரம்மோத்சவம் தேர் பராமரிப்பு தீவிரம்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில்.
யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கரில் உள்ளது. இந்த கோவிலில் வரும் 2ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோத்சவம் துவங்க உள்ளது. தினசரி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா எழுந்தருளி உள்ளார்.
இதில், 8 ம் தேதி பிரசித்தி பெற்ற தேர் திருவிழா நடைபெறும். இதற்காக, கோவில் வளாகத்தில் உள்ள தேர் அரங்கத்தில், பாதுகாப்பு தகடுகள் அகற்றப்பட்டு, பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளன. ஓராண்டுக்கு பின் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் தேர், பிரம்மோத்சவம் துவங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோத்சவத்தை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி
Advertisement
Advertisement