203 கட்டுமான திட்டங்களுக்கு நான்கு மாதங்களில் ஒப்புதல்
சென்னை:சென்னை பெருநகர் பகுதியில், கடந்த நான்கு மாதங்களில், ஆன்லைன் முறையில், 203 கட்டுமான திட்டங்களுக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது.
நகர், ஊரமைப்பு சட்டப்படி, கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பணிகள், 2021 முதல் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. தற்போது, ஒற்றை சாளர முறைக்கான இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
இதில், கட்டுமான நிறுவனங்களின் விண்ணப்பம், டிஜிட்டல் முறையில் மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது. அதிகாரிகளின் குறிப்புகளும் டிஜிட்டல் முறையிலேயே பதிவிடப்படுகிறது.
கட்டுமான திட்டங்களுக்கு பல்வேறு துறைகளின் தடையின்மை சான்றிதழ் வழங்கும் பணியும் ஆன்லைன் முறையிலேயே நடக்கிறது.
இதனால், விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை காலம், 180 நாட்களில் இருந்து, 60 நாட்களாக குறைந்துள்ளது.
இந்நிலையில், 2024ல், 12 மாதங்களில், 678 கட்டுமான திட்டங்களுக்கு ஆன்லைன் முறையில் ஒப்புதல் தரப்பட்டது. இதில், ஜன., முதல் ஏப்., வரையிலான நான்கு மாதங்களில், 147 திட்டங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆனால், நடப்பு ஆண்டில், ஏப்., வரையிலான, நான்கு மாதங்களில், 203 கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில், 12 அதிக உயர அடுக்குமாடி கட்டடங்கள், 49 மனைப்பிரிவுகளும் அடங்கும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி