மதுக்கூடம் ஆக்கிரமித்த நடைபாதை மீட்பு

தி.நகர்,:கோடம்பாக்கம் மண்டலம், 141வது வார்டு தி.நகர் சி.ஐ.டி., நகரில், கெனால் வங்கி சாலை உள்ளது. இச்சாலையில் 'டாஸ்மாக்' கடையுடன், தனியார் மதுக்கூடம் உள்ளது.
இந்த மதுக்கூடத்தின் முகப்பை மறைக்கும் விதமாக, நடைபாதையை ஆக்கிரமித்து தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மறைத்து வைத்து, 'டாஸ்மாக்' கடை திறக்காத நேரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது.
இங்கு, இரவில் மது வாங்கும் 'குடி'மகன்களால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தொடர்ந்து புகார் எழுந்தது.
இதையடுத்து நேற்று, கோடம்பாக்கம் மண்டல செயற்பொறியாளர் இனியன் மற்றும் உதவி செயற்பொறியாளர் கமலகண்ணன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள், நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அப்புறப்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
Advertisement
Advertisement