சேதம் அடைந்த ரோடால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் நுழைவுப் பகுதியில் ரயில்வே கேட் அருகே பிரதான ரோடு நடுவில் சேதம் அடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
தென்கால் கண்மாய் கரையில் வாகன போக்குவரத்துக்காக புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. திருமங்கலம், திருநகரில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் புதிதாக அமைத்த ரோட்டில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த ரோடு பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை.
புதிய ரோடு துவங்கும் இடத்தை ஒட்டியுள்ள ரோட்டில்தான் தற்போது வாகனங்கள் செல்கி்ன்றன. புதிய ரோட்டை அமைத்தபோது, அப்பகுதியில் 500 அடிக்கு சேதம் அடைந்தது. இதையடுத்து தார் முற்றிலும் மறைந்து ஜல்லிக்கற்களாக பரவிக் கிடக்கின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். விபரீதம் விளையும் முன் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு