புதிய பஸ்கள் துவக்கம்
அழகர்கோவில்: அழகர்கோவிலில் அறநிலைத்துறை சார்பில் கள்ளழகர் கோயில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக ரூ. 1.20 கோடி மதிப்பில் 4 புதிய மினி பஸ்கள் துவங்கப்பட்டது.
அழகர்கோவில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கு மினிபஸ்கள் சென்று வந்தன. பதினைந்து ஆண்டுகளாக இயங்கிய இப்பஸ்கள் பழமையாகி, சேதமடைந்துள்ளது. எனவே அவற்றை மாற்றி புதிய பஸ்களை இயக்க திட்டமிட்டனர்.
இதையடுத்து 4 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. இப்பஸ்களை அமைச்சர்கள் மூர்த்தி, சேகர்பாபு நேற்று கொடியசைத்து துவக்கினர். கள்ளழகர் கோயில் முதல் சோலைமலை முருகன் கோயில் வரை 3 கி.மீ., துாரத்திற்கு ஒருவருக்கு ரூ. 10 கட்டணம்.
இந்நிகழ்ச்சியில் கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் மீனாட்சி, பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்கள் சுப்புலட்சுமி, மீனா, திருப்பரங்குன்றம் அறங்காவலர் சண்முக சுந்தரம் பங்கேற்றனர்.
மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்