கம்பராயப் பெருமாள் கோயிலில் ரூ.1.50 கோடியில் தங்கும் விடுதி கம்பம் எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு
கம்பம்: சபரிமலை செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கம்பராயப் பெருமாள் கோயிலிற்கு சொந்தமான காலி இடத்தில் ரூ.1.50 கோடியில் தங்கும் விடுதி கட்ட எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு ஹிந்து சமய அறநிலைய துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களிலும், ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் 5 நாட்களிலும் சபரிமலைக்கு கம்பம் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள், கம்பத்தில் தங்கி சுருளி அருவிக்கு சென்று குளித்துச் செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு தங்குவதற்கு போதிய வசதி இல்லை.
மேலும் பென்னிகுவிக் மண்டபம், தேக்கடி போன்ற சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் தங்குவதற்கு சரியான விடுதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகும்.
இங்கு ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நடைபெறும் பூஜையில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வந்து செல்கின்றனர்.
இவர்களின் வசதிக்காகவும், கோயிலின் வருவாயை அதிகரிக்கும் நோக்குடனும் கம்பராயப் பெருமாள் கோயிலிற்கு சொந்தமான காலி இடத்தில் தங்கும் விடுதி கட்ட ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று தங்கும் விடுதி கட்ட ரூ.1.50 கோடி அனுமதிக்கப்பட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்